இறையேசுவில் அன்புள்ளவர்களே! வணக்கம், இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இந்த வலைப்பதிவு மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். . பணி. ஸடீபன்.
RSS
தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - 17.07.2010 - மறைபணி நிலையம், குடந்தை!

Thursday, July 15, 2010

ஆயரின் ஆசிரும் வாழ்த்துக்களும்...

அருள் தந்தையர்களே, அருட்சகோதரிகளே, இருபால் ஆசிரிய பெருமக்களே!
உங்கள் அனைவரையும் இச்சுற்றறிக்கை மூலம் சந்திப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அது மனித குலத்தை வளமுள்ளதாகச் செய்கிறது. அறிவியல் வளர்ச்சி நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆன்மிகமும், அறநெறியும் தனி மனித வளர்ச்சிக்கு அவசியம்.
எனவே மறைக்கல்வியையும், நன்னெறியையும் மாணவ, மாணவிகளுக்கு திறம்படக் கற்பியுங்கள். மதிப்பீட்டுக் கல்வியும் உங்கள் இடம் தேடி வந்து, ஆளுமைத் தன்மை, குறிக்கோள், பதின்பருவ உடல், உள்ள வளர்ச்சி ... போன்ற தலைப்புகளில் வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளைக் கற்பிக்கின்றது.
நீங்கள் அனைவரும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். “பச்சிலையோ, களிம்போ அவர்களுக்கு நலம் தரவில்லை. ஆனால் ஆண்டவரின் வார்த்தை நலமளித்தது”
(சா ஞா 16 : 12 ) என்று சாலமோனின் ஞான நூல் கூறுகிறது.
ஆசிரிய பெருமக்களே! நீங்கள் நலமளிப்பவர்கள். மாணவ, மாணவிகளுக்கு சிறந்த நற்செய்தியாளர்களாகத் திகழுங்கள்; அவர்களை நலம் பயப்பவர்களாக மாற்றுங்கள். இறைவன் உங்கள் மீது அருளுக்கு மேல் அருளையும், வாழ்வுக்கு மேல் வாழ்வையும் பொழிவாராக!
உங்கள் பணி சிறக்க எனது ஆசிரும், செபங்களும்.

என்றும் அன்புடன்,


(F.அந்தோனிசாமி)
குடந்தை ஆயர்.

From the Secretary

இறையேசுவில் அன்புள்ள அருள்பணியாளர்களே!
பள்ளித் தாளாளர்களே! அருள் சகோதர, சகோதரிகளே!
பள்ளி முதல்வர்களே! இருபால் ஆசிரியப் பெருமக்களே!

வணக்கம், உங்கள் அனைவருக்கும் எனது உளநிறை செபவாழ்த்துக்கள்.  இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இச்சுற்றுமடல் மூலம் உங்களைச் சந்திப்பதில் நான் பெரிதும் மகிழ்கிறேன்.

நல்ல மனிதர்களை சந்திப்பது கடவுளை சந்திப்பதற்கு சமம். நான் கடவுளை சந்தித்தேன் என்று எப்போது நம் சமுதாயம் சொல்லப் போகிறது?  வளர்ந்து வரும் இளம் பிஞ்சு உள்ளங்களில் ஆடை கட்டாத ஆசைகளை கட்டிவிட்டது யார்? அராஜகமா? அன்றாட தொல்லைகாட்சிகளா (தொலைகாட்சிகளா)? சமூக நிகழ்வுகளா?  எதைச் சொல்ல. எது எப்படியோ, பொறுப்பு நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இருபால் ஆசிரிய பெருமக்களே!
‘கள்ளமில்லா நெஞ்சம் வேண்டும்,
களித்து உலகில் வாழ வேண்டும்,

உள்ளத்தில் நேர்மை வேண்டும்,
உண்மையை பேச வேண்டும்.’
என்று நன்னெறியாம் அறநெறியை சிறப்பாக பயிற்றுவிக்றீர்கள்.

இளம் பிஞ்சுகளை இறைவனோடு ஒப்புரவு (அன்புறவு) செய்ய வழி வகுக்கும் காலம், இந்த பள்ளி பருவம் என்பதை உணர்ந்து செயல்படுகிறீர்கள்.

அதற்காக உங்களை வாழ்த்துகின்றேன். இறைவனுக்கு நன்றி  சொல்ல பலக் காரணங்கள் உண்டு. இருபால் ஆசிரிய பெருமக்களே உங்களுக்கு நன்றிச் சொல்ல ஒரு காரணம் தான் உண்டு.

இளம் சமுதாயத்தை இறைவனுக்கும் இயற்கைக்கும் ஏற்றவர்களாய் வார்ப்பதுதான். வார்த்தெடுங்கள், செதுக்குங்கள் என்று வாழ்த்துகிறேன் பன்முறை. என்னோடு தோள் கொடுத்து ஒத்துழைக்கும் அருட்சகோதரிகள், வேதியர்கள் அனைவருக்கும் நன்றியும் செபங்களும்.

சிந்தனைக்கு சில வரிகள் :-
தன் மனசாட்சியை நோக்காதவன் குருடன்;
அதன் வழி நடக்காதவன் முடவன்
- பதுவை அந்தோணியார்.
நல்ல மனசாட்சி இறைவனின் இருப்பிடம்;
மகிழ்ச்சியின் மறைவிடம்.
- புனித அகுஸ்தீனார்.
நான் என்னுடைய மனசாட்சியை மகிழ்ச்சிப்படுத்துவேன்;
ஏனெனில் அதுதான் கடவுள்
- காந்தி.
சிந்திப்போம் கரம் கோர்ப்போம்...
வருகின்ற கல்வி ஆண்டிலே இன்னும் சிறப்பாக செய்ய இறைவனின் துணை வேண்டுவோம். இறைவன் நம்மை வழி நடத்துவார்.
ஜெயம் நமதே.
தங்கள் அன்புள்ள
அருள்தந்தை ஸ்டீபன்.

இறையியல் பயிற்சி கருத்தரங்கு :

நமது ஆயர் விருப்பப்படி நமது மறைமாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு இறையியல் பயிற்சி கருத்தரங்கு ஆயர் அவர்களின் தலைமையில் இந்த ஆண்டும் நடைபெறும். கடந்த ஆண்டு லால்குடி மறைவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு முறையே 28.11.2009 முசிறி, 14.01.2010 புறத்தாக்குடி, 13.02.2010 இலால்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய பங்கு தந்தையர்கள், தாளாளர்கள், அருட்சகோதரிகள், தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள் அனைவருக்கும் நமது ஆயர் அவர்களின் பெயராலும், மறைக்கல்வி பணிக்குழுவின் சார்பாகவும் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு பெரம்பலூர் மறைவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு 16.10.2010 அன்று பெரம்பலூரையும், 17.11.2010 அன்று கோட்டபாளையத்தையும் மையமாகக் கொண்டு இறையியல் பயிற்சி கருத்தரங்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



இறையியல் பயிற்சி கருத்தரங்களில் கலந்து கொள்ள வேண்டிய பள்ளிகளின் விபரம்...

1. பெரம்பலூர் மையத்தில்... (16.10.2010)
            1. புனித தோமினிக் பெ.மே.நி.பள்ளி,     பெரம்பலூர்.
            2. புனித பாத்திமா து.பள்ளிபெரம்பலூர்.
            3. புனித வளனார் ஆங்கிலப்பள்ளி,         பெரம்பலூர்.
            4. புனித ஆரோக்கிய அன்னை ந.நி.பள்ளிபாத்திமாபுரம்.
            5. புனித மரியன்னை ந.நி.பள்ளி,   எறையூர்.
            6. புனித ஜான் உ.நி.பள்ளி,      பெருமாத்தூர்.
            7. புனித ஆன்ட்ரூஸ் ஆ.பள்ளி,     திருமாந்துறை.
            8. சிறுமலர் து.பள்ளி,        வடக்கலுர்.
            9. ஆர்.சி. துவக்கப்பள்ளி,           கழனிவாசல்.
            10.ஆர்.சி. துவக்கப்பள்ளி,          கா.நல்லூர்.
            11. புனித ஜான் ந.நி.பள்ளி,       திருவளாந்துரை.
            12. ஆர்.சி. துவக்கப்பள்ளி,         மரவனத்தம்.
            13. புனித மரியன்னை ந.நி.பள்ளி, பாளையம்.
            14. சிறுமலர் மே.நி.பள்ளி,         அன்னமங்கலம்.
            15. சிறுமலர் து.பள்ளி,      அன்னமங்கலம்.
            16. புனித மரியன்னை ந.நி.பள்ளி, தொண்டமாந்துரை.

2. கோட்டபாளையம் மையத்தில்... (17.11.2010)
            1. அன்னை லூர்து பெ.மே.நி.பள்ளி,        கோ.பாளையம்.
            2. புனித மரியன்னை ந.நி.பள்ளிகோ.பாளையம்.
            3. புனித எட்வர்ட் து.பள்ளி,    கோ.பாளையம்.
            4. ஆர்.சி. துவக்கப்பள்ளி,           புதுப்பட்டி.
            5. ஆர்.சி. ந.நி.பள்ளி,          பெ.பாளையம்.
            6. ஆர்.சி. துவக்கப்பள்ளி,           கிருஷ்ணாபுரம்.
            7. விமலா ஆங்கிலப்பள்ளி,     துறையூர்.
            
அரசு பள்ளிகளில் பணிபுரிகின்ற தங்களுக்கு தெரிந்த கத்தோலிக்க ஆசிரியர்களையும் இந்த கருத்தரங்கிற்கு முடிந்த மட்டும் அழைத்து வரவும்.

இறையியல் கருத்தரங்கு நிகழ்வுகள்...

1.         09.00            தொடக்க நிகழ்வுகள்
                        (இறைவணக்கம், இறைவார்த்தை, செபம்)
2.        09.30 - 10.30   நம்மையே நாம் ஆளுவது எப்படி?
                                         (How to Manage ourselves?)
          மேதகு ஆயர். F.அந்தோனிசாமி
3.        10.30 - 11.30     விவிலியம் (Bible)
                        அருட்தந்தை பெஞ்சமின் ஜோசப் ராஜ்
4.        11.30 - 11.45      இடைவேளை
5.         11.45 - 01.00     கிறிஸ்தவ விசுவாசம் (Christian Faith)
                        அருட்தந்தை அருள்பிரகாசம்
6.        01.00 - 02.00               Lunch
7.        02.00 - 03.15   அருட்சாதனங்கள் (Sacraments)
                        அருட்தந்தை ஸ்டீபன்
8.        03.15 - 04.30    தூய ஆவியில் வாழ்வு (Life in the Spirit)
                        மேதகு ஆயர். F.அந்தோனிசாமி
9.        04.30            தேனீர்

திருமறைச்சுவடி, திருப்பலி பூசையின் செபங்கள் :

இளம் பிஞ்சு உள்ளங்களில் கத்தோலிக்கத் திருமறைச் செபங்கள் ஆழமாகப் பதிக்கப்படல் வேண்டும். எனவே ஒன்று முதல் நான்கு வரை படிக்கும் கத்தோலிக்க மாணவ, மாணவியர் திருமறைச்சுவடி மற்றும் திருப்பலி பூசையின் செபங்களைப் படித்து மனப்பாடம் செய்யச் செய்தல் வேண்டும். இதன் காரணமாக முதல் வகுப்புகளுக்கான மறைக்கல்விப் புத்தகங்களோடு திருப்பலி மற்றும் திருமறைச்சுவடி புத்தங்களையும் பயன்படுத்தவும்.

மறைக்கல்வி - நன்னெறிக்கல்விப் பாடவேளை :

கடந்த ஆண்டைப் போலவே அனைத்து பள்ளிகளிலும் காலை 9.15 முதல் 9.45 வரை மறைக்கல்வி நன்னெறிக்கல்வி பாடங்கள் தினமும் நடத்தப்பட வேண்டும்.

மறைக்கல்வி நன்னெறிக்கல்வி தொடர்பாளர் :

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஓர் ஆசிரியர் மறைக்கல்வி - நன்னெறிக்கல்வி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டு புத்தக வினியோகம் செய்யும் வேளையிலோ அல்லது அதற்கு முன்பாகவோ கடிதமாகவோ அல்லது தொலைபேசியிலோ தங்களுடைய பெயரையும்
தொலைபேசி எண்ணையும் எங்களுக்கு தெரிவிக்கும்படி  கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை வசூல் :

கடந்த ஆண்டைப் போலவே மறைக்கல்வி - நன்னெறிக்கல்வி செயல்பாட்டினுக்காக ரூ.1/- மறைக்கல்விப் பணிக்குழுவே வசூல் செய்யும். எனவே அனைத்து (தமிழ்வழி, ஆங்கில வழி) பள்ளி மாணவ / மாணவிகளும் ரூ.1/- யை வழங்கிட கேட்டுக் கொள்கிறோம். இத்தொகையினை புத்தகம் வாங்கும் பொழுதே செலுத்திடவும்.



பள்ளி ஆண்டாய்வு :

பள்ளி ஆண்டாய்வு நேரத்தில் பணிக்குழுவினரை வரவேற்றல் உபசரித்தல் அனைத்தும் பாராட்டுகுரியது. ஆண்டாய்விற்குரிய தயாரிப்பு சிறப்பாக அமைதல் வேண்டும்.  துணைக்கருவிகள் அதிகளவில் பயன்படுத்தலாம். ஆண்டாய்வு நோட்டு அடிக்கடி மாற்றப்படக்கூடாது.

பொதுத்தேர்வு மற்றும் சிறப்புத் தேர்வுகள் : 

கடந்த ஆண்டைப் போலவே காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்ளவும். பொதுத்தேர்வுக்குரிய வினாத்தாள்கள், சிறப்புத் தேர்வுக்குரிய வினா மற்றும் விடைத்தாள்களை மறைக்கல்விப் பணிக்குழு அளிக்கும். இவற்றிற்குரிய கட்டணமாக மாணவர் ஒருவருக்கு ரூ. 1/- (ஒன்று மட்டும்) வழங்கிடல் வேண்டும். பொதுத் தேர்வு 04.12.2010 அன்றும் சிறப்பு தேர்வு 08.01.2011 அன்றும் நடைபெறும்.

மறைக்கல்வி நன்னெறிக்கல்வி புத்தக வினியோகம் :

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அனைத்து தமிழ்வழி, ஆங்கிலப் பள்ளிகளுக்கும் 14.06.2010 முதல் 19.06.2010 வரை உங்கள் பள்ளியைத் தேடி வந்து புத்தகங்கள் கீழ்கண்ட அட்டவணைப்படி வழங்கப்படும். கடந்த ஆண்டைப் போலவே சரக்குக் கட்டணமாக புத்தகம் ஒன்றுக்கு 0.50/- பைசா அளிக்கப்பட வேண்டும்.

புத்தகங்களின் விலைப்பட்டியல் :
வகுப்பு        மறைக்கல்வி  நன்னெறி
1ஆம் வகுப்பு        12.00            7.00           
2ஆம் வகுப்பு        12.00            7.00           
3ஆம் வகுப்பு        15.00            7.00           
4ஆம் வகுப்பு        16.00            7.00           
5ஆம் வகுப்பு        16.00            7.00           
6ஆம் வகுப்பு        16.00            8.00           
7ஆம் வகுப்பு        16.00            8.00           
8ஆம் வகுப்பு        16.00            8.00           
9ஆம் வகுப்பு        16.00            8.00           
10ஆம் வகுப்பு       16.00            8.00           
11ஆம் வகுப்பு       18.00            8.00           
12ஆம் வகுப்பு       18.00            8.00           

SCHOOL CATECHISM BOOKS - ENGLISH
Ist  to Vth Std (each)                                             35.00           
VIth to VIIIth Std (each)                                      40.00           
IXth to XIIth Std (each)                                        45.00           
Becoming Human - Value Education Books
Ist  to Xth Std (each)                                             15.00           
XIth & XIIth Std (each)                                        20.00           

மதிப்பீட்டுக் கல்வி - Value Education

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் +2 மாணவ, மாணவிகளுக்கு மதிப்பீட்டுக் கல்வியானது கீழ்கண்ட தலைப்புகளில் நடைபெறும்.







ஆளுமை பண்புகள்.
குறிக்கோள்.
பதின்பருவத்தின் உடல் உள்ள வளர்ச்சி.
சமூகத் தொடர்பு சாதனங்களின் தாக்கம்.
வாழ்க்கை மதிப்பீடுகள்.(தனிமனித வாழ்வில் ஆன்மீக வாழ்வில்)
மதிப்பீட்டுக்கல்வி நடத்தும் உரையாளர்களுக்கு T.A. கொடுக்க வேண்டியுள்ளதால் தாங்கள் குறைந்த பட்சம் ரூ. 1500/- கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மதிப்பீட்டுக்கல்வி நடைபெறும் பள்ளிகளும் நாட்களும் அட்டவணையைக் காண்க.
  1. 26.06.2010 அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி
  2. 03.07.2010 புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி, புறத்தாக்குடி.
  3. 10.07.2010 புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,குடந்தை.
  4. 17.07.2010 புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, இலால்குடி.
  5. 24.07.2010 அலங்கார அன்னை மேல்நிலைப் பள்ளி,வரதராஜன் பேட்டை.
  6. 31.07.2010 புனித அன்னை லூர்து மேல்நிலைப் பள்ளி,தென்னூர்.
  7. 07.08.2010 தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி,வரதராஜன் பேட்டை.
  8. 14.08.2010 புனித பாத்திமா மேல்நிலைப் பள்ளி,ஜெயங்கொண்டம்.
  9. 21.08.2010 புனித பிலேமினா மேல்நிலைப் பள்ளி, குழுமூர்.
  10. 28.08.2010 புனித நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி,அரியலூர்.
  11. 04.09.2010 திருஇருதய ஆண்டவர் மேல்நிலைப் பள்ளி,மிக்கேல்பட்டி.
  12. 11.09.2010 புனித தோமினிக் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
  13. 09.10.2010 சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, அன்னமங்கலம்.
  14. 23.10.2010 அன்னை லூர்து மேல்நிலைப் பள்ளி.கோட்டப்பாளையம்.
  15. 30.10.2010 புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி,வடுகர்பேட்டை.
  16. 13.11.2010 புனித பீட்டர் மேல்நிலைப் பள்ளி, விரகாலூர்.
  17. 20.11.2010 புனித கபிரியேல் மேல்நிலைப் பள்ளி,பசுபதி கோவில்
  18. 27.11.2010 சிறுமலர் மேல்நிலைப்பள்ளி. குடந்தை